மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனருமான பில் கேட்ஸ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “லேசான காய்ச்சல் அறிகுறியுடன் உள்ள எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி என் உடல்நிலை தேறும் வரை என்னை தனிமைப்படுத்திக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
பில்கேட்ஸ் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியுடன் பூஸ்டர் டோசும் செலுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பில் கேட்ஸ் அளித்த பேட்டி ஒன்றில், கொரோனா நெருக்கடி இன்னும் முடிவடையவில்லை என்றும் உலகம் மற்றொரு தொற்றுநோய் அபாயத்தில் உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்கலாம்: 'விண்டோஸ் வெற்றி நாயகன்'.. பில்கேட்ஸ் பிறந்தநாள் பகிர்வு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/zp1Crwk
No comments:
Post a Comment